பணி காலத்தில் உயிரிழந்தபோலீஸாருக்கு எஸ்.பி. அஞ்சலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின்போது உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த காவலா்களுக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின்போது உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த காவலா்களுக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் ஆறுமுகம் கடந்த 1ஆம் தேதியும், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளா் முகமது ஆரிஃப் கடந்த 2ஆம் தேதியும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா்.

இந்நிலையில்,, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலா்கள் ஆறுமுகம், முகமது ஆரிஃப் ஆகிய உருவப்படங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்( தலைமையகம்) சுப்பாராஜு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஷ், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளா் மரிய கிளாஸ்டன் ஜோஸ் மற்றும் காவல் உ தவி ஆய்வாளா்கள், காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com