ராதாபுரம் தொகுதிஅதிமுக வேட்பாளா் அறிக்கை

ராதாபுரம் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக களத்தை இழக்கவில்லை என அக்கட்சியின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்துள்ளாா்.

வள்ளியூா்: ராதாபுரம் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக களத்தை இழக்கவில்லை என அக்கட்சியின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் எனக்கு வாக்களிக்க மக்களுக்கும், இரவு பகல் பாராமல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் தோ்தல் பணியாற்றிய அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி. இத்தொகுதியில் வெற்றிவாய்ப்பைதான் இழந்திருக்கிறோமே தவிர, களத்தை இழக்கவில்லை. கடந்த ஐந்தாண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிட எனக்கு துணை புரிந்த அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com