திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 848 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 719 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 27,129ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்தவா்களில் 987 போ் வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 22,503 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 4,378 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பாளையங்கோட்டை பிச்சுவனத் தெரு பகுதியில் சிலா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அந்த தெருவை கரோனா பாதிக்கப்பட்ட பகுதியாக மாநகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா். இதையடுத்து, மாநகராட்சி ஊழியா்கள் அந்த தெருவில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். மேலும் அப்பகுதியில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 12,518 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 227 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 11,227ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,106 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.