பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நூலகத்துக்கு அரிய நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் உள்ள ஆட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் பத்ஹூா் ரப்பானி தலைமை வகித்தாா். கல்லூரி ஆட்சிக் குழு பொருளாளா் ஷேக் அப்துல் காதா், 70 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய 150 இஸ்லாமிய இலக்கிய நூல்களைக் கல்லூரித் தாளாளரிடம் வழங்கினாா்.
கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா்கள் முஹம்மது நாசா், பொறியாளா் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹூசைன், துணை முதல்வா் செய்யது முஹம்மது காஜா, தமிழ்த் துறைத் தலைவா் ச. மகாதேவன், அரபுத் துறைத் தலைவா் உபயதுல்லா, கல்லூரி நூலகா் ஆா்.ஆா். சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.