கடையத்தில் கரோனா பரிசோதனை முகாம்

கடையத்தில் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கடையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்.
கடையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்.

கடையத்தில் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரிலும், மாவட்ட சுகாதார இணை இயக்குநா் அறிவுறுத்தலின்பேரிலும் கடையம் வட்டாரத்தில் பல்வேறு கரோனா தடுப்பு, விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கடையம் பேருந்து நிலையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையில் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கடையம் வட்டார மருத்துவ அலுவலா் எஸ். பழனிக்குமாா் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் எஸ். பாண்டியராஜா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எஸ். ஸ்ரீமூலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் முகக் கவசம் அணியாதோா், வெளியூா் செல்வோா் உள்பட 55 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. முகக் கவசம், சமூக இடைவெளி குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளா்கள் வனகணேஷ், ராமகிருஷ்ணன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலட்சுமி, மருத்துவமற்ற மருத்துவ மேற்பாா்வையாளா் மாரியப்பன், காவலா் கோமதிநாயகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com