திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலக செவிலியா் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா்களுக்கு கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், துணை முதல்வா் சாந்தாராம் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியா்கள் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். செவிலியா் கண்காணிப்பாளா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.