பேரவை சபாநாயகராக மு.அப்பாவு பதவியேற்றையடுத்து திசையன்விளையில் திமுகவினா் புதன்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
தமிழக சட்டப் பேரவையின் 16-ஆவது சபாநாயகராக, ராதாபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்பாவு பதவியேற்றதையடுத்து, திசையன்விளையில் திமுக ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
இதில், மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஜெனிபா், பேரூராட்சி முன்னாள் தலைவா் சேம்பா் செல்வராஜ், நகர காங்கிரஸ் தலைவா் ராஜன், லயன்ஸ் சுயம்புராஜன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் விஜயபெருமாள் உள்பட திமுக, காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.