ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்பாவு பேரவைத் தலைவராகப் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதையடுத்து, பணகுடியில் மதிமுக ஒன்றியச் செயலா் மு.சங்கா் தலைமையில் திமுகவைச் சோ்ந்த அசோக்குமாா், ஆபிரகாம், ஐயப்பன் ஆகியோா் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
சமூகரெங்கபுரத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் முரளி, தக்காளி குமாா் தலைமையிலும் தெற்குகள்ளிகுளத்தில் ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி தலைமையிலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.