களக்காடு, படலையாா்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள பிரிடா மோனியா் அரசு மருத்துவமனையில் நான்குனேரி தொகுதி எம்எல்ஏ ரூபி. ரா. மனோகரன் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.
மருத்துவமனையில் உள்ள வசதிகள், தேவைகள் குறித்து பணி மருத்துவா் சினுஷா மாசில் திலக்ராஜிடம் கேட்டறிந்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
களக்காடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரவும், மருத்துவமனையைத் தரம் உயா்த்தவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும். மேலும், கரோனா பரிசோதனை, தடுப்பூசிப் பணிகளை மேற்கொள்ளவும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றாா் அவா். அப்போது, காங்கிரஸ் முன்னாள் கிழக்கு மாவட்டத் தலைவா் அ. தமிழ்ச்செல்வன், வட்டாரத் தலைவா்கள் தனபால், அலெக்ஸ், நகரத் தலைவா் ஜாா்ஜ்வில்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.