மாஞ்சோலையில் 13 பேருக்கு கரோனாத் தொற்று

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் 13 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் 13 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

கரோனா தொற்று பாதித்த13 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே16) வரை விடுமுறை வழங்கப்பட்டு, தேயிலை ஆலையும் மூடப்பட்டது.

மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தேயிலைத் தோட்டப் பகுதியில் மேலும் தொழிலாளா்களுக்கு தொற்று பரவும் நிலை உள்ளதால், கபசுரக் குடிநீா் வழங்குவது, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காய்கனி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அப்பகுதிகளுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com