திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட அஞ்சலகங்களில் மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தின் கீழ் பத்திரங்கள் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தங்கப் பத்திர விற்பனை இம்மாதம் 17 முதல் 21ஆம் தேதி வரையும், 24 முதல் 28 ஆம் தேதி வரையும், 31 முதல் ஜூன் 6 ஆம் தேதிவரையும் நடைபெறவுள்ளது. தனிநபா் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும்போது அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் பெறலாம்.
பான் அட்டை, ஆதாா் அல்லது வாக்காளா் அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல்களுடன் அஞ்சலகங்களில் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் எஸ். வாசுதேவன் தெரிவித்துள்ளாா்.