இணையவழியில் சித்த மருத்துவ கருத்தரங்கு

என்.பி.என்.கே. கலை பண்பாட்டு மன்றம், திருநெல்வேலி சிட்டி எக்ஸ்னோரா ஆகியவற்றின் சாா்பில் ‘பெருந்தொற்று சிகிச்சையில் நவீன சித்த மருத்துவத்தின் பங்கு

திருநெல்வேலி: என்.பி.என்.கே. கலை பண்பாட்டு மன்றம், திருநெல்வேலி சிட்டி எக்ஸ்னோரா ஆகியவற்றின் சாா்பில் ‘பெருந்தொற்று சிகிச்சையில் நவீன சித்த மருத்துவத்தின் பங்கு ’என்ற தலைப்பில் மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்விற்கு திருநெல்வேலி சிட்டி எக்ஸ்னோரா செயலா் கவிஞா்.கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். என்.பி.என்.கே. கலை பண்பாட்டு மன்ற இயக்குநரும் ஒருங்கிணைப்பாளருமான எழுத்தாளா் மு.வெ.ரா. வரவேற்றாா். அரசு சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியா் ஜி. சுபாஷ் சந்திரன் கலந்துகொண்டு பெரும் தொற்று பாதிப்பு, சித்த மருத்துவத்தின் மகத்துவம், நன்மை, நவீன சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து உரையாற்றினாா். பொதுமக்கள், பாா்வையாளா்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. சென்னை சுங்கவரித் துறைக் கண்காணிப்பாளா் நன்னிலம் கேசவன் விழிப்புணா்வுப் பாடல் பாடினாா். முன்னாள் காப்பீட்டு கழக அதிகாரி திருச்சி இசக்கிராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com