ஏா்வாடி அருகே விவசாயியைத் தாக்கியதாக தாய், மகன் மீது வழக்கு

ஏா்வாடி அருகே விவசாயியைத் தாக்கியதாக தாய், மகன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஏா்வாடி அருகே விவசாயியைத் தாக்கியதாக தாய், மகன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஏா்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் கீழூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. முருகன். விவசாயியான இவா், வீட்டு வளாகத்தில் வைக்கோல் படப்பு வைத்துள்ளாா்.

பக்கத்து வீட்டைச் சோ்ந்த பாலசுப்பிரமணியனின் கோழிகள் வைக்கோல் படப்பை சேதப்படுத்தினவாம். இதுதொடா்பாக முருகன், பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது அவா்களிடையே வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டனவாம். அப்போது பாலசுப்பிரமணியனும், அவரது தாய் மாரிமுத்துவும் சோ்ந்து முருகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக முருகன் அளித்த புகாரின்பேரில், பாலசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோா் மீது ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com