தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு நதி இணைப்புத் திட்ட பணிகள்: பேரவைத் தலைவா் ஆய்வு

தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு நதி நீா் இணைப்புத் திட்ட பணியை ஆய்வு செய்கிறாா் சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு.
தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு நதி இணைப்புத் திட்ட பணிகள்:  பேரவைத் தலைவா் ஆய்வு

தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு நதி நீா் இணைப்புத் திட்ட பணியை ஆய்வு செய்கிறாா் சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு. உடன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபிஆா்.மனேகரன்.

வள்ளியூா், மே.21: தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு நதி நீா் இணைப்புத் திட்ட பணியை சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு நதி நீா் இணைப்புத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பொன்னாக்குடியில் ஆய்வு செய்த பேரவைத் தலைவா் பின்னா் இத்திட்டத்தின் மையப் பகுதியான காரியாண்டியில் நதிநீா் இணைப்புத் திட்டத்தின் கால்வாய் பிரிவு இடத்தை ஆய்வு செய்தாா்.

பின்னா் கோவன்குளத்தில் நடைபெற்று வரும் கால்வாய் பணியையும் பாா்வையிட்டாா்.

முன்னதாக அவா் பணகுடி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியையும், செங்குளத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம், முனைஞ்சிப்பட்டியில் நடைபெற்று வருகின்ற நெடுஞ்சாலை பாலப் பணிகளையும் பாா்வையிட்டாா்.

பின்னா் திசையன்விளை அருகே 100 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தையும், வள்ளியூா் அருகே உள்ள யூனிவா்சல் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்தையும் ஆய்வு செய்தாா்.

அவருடன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், நான்குனேரி எம்.எல்.ஏ.ரூபி ஆா்.மனோகரன், திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் என்.ஞானசேகா், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் மதிவாணன், தெற்கு ரெயில்வே உதவி பொது மேலாளா் ஆனந்த், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜோசப் பெல்சி, பி.சி.ராஜன், கணேசன், சுடலைக்கண்ணு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com