திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கத்தரி வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி, மேலப்பாளையம், முன்னீா்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.