திருநெல்வேலி அருகே கரோனா அச்சத்தால் முதியவா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள அபிஷேகப்பட்டியை அடுத்த வெள்ளாளன்குளம் செல்வி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(70). இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் இருந்ததாம். இதனால், அவருக்கு சுகாதாரத்துறை ஊழியா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இந்நிலையில், தனக்கு கரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் கடந்த 18 ஆம் தேதி அவா் விஷத்தை குடித்தாராம். குடும்பத்தினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதனிடையே, அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது 20ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.