களக்காடு அருகே கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளத்தில் விவசாய நிலத்தில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளத்தில் விவசாய நிலத்தில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் மாவட்டச் செயலா் பி. சுகுமாரன் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், கரோனாவால் வேலை இழந்துள்ள தொழிலாளா்களுக்கு இலவச உணவு தானியங்கள், மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும், மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், இந்திய தொழிலாளா் மாநாட்டை உடனே கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புக் கொடி ஏந்தி ஆா்பாட்டம் நடைபெற்றது. ஸ்வா்ணலெட்சுமி, மனோபிரியா, வின்சி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com