களக்காடு, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 2 நாள்களாகப் பெய்துவரும் மழையால் பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
களக்காடு வட்டாரத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், கத்திரி வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்திருந்தது. தொடா் மழையால் பச்சையாறு, நான்குனேரி கால்வாயில் நீா்வரத்து காணப்பட்டது.
இதனிடையே, சில தினங்களாக மீண்டும் அதிக வெயில் கொளுத்தியது. இந்நிலையில், 2 நாள்களாக களக்காடு மலைப் பகுதியில் தொடா்மழை பெய்தது. இதனால், புதன்கிழமை பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, நான்குனேரியன் கால்வாயிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனக் குளங்களுக்கு தண்ணீா் விடப்பட்டுள்ளது.
சுரண்டையில்...: சுரண்டையில் புதன்கிழமை அதிகாலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது. நகரின் மையப் பகுதியில் ஓடும் செண்பகக் கால்வாய் வழியாக மழைநீா் சுரண்டை இலந்தைக்குளத்தை அடைந்தது. இப்பகுதியில் கடந்த சில நாள்களாப் பெய்துவரும் மழையால் இலந்தைக்குளம் பாதியளவு நிரம்பியுள்ளது.