தச்சநல்லூா் மண்டலத்தில் இன்றும், நாளையும் குடிநீா் வராது
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூா் மண்டலத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 27, 28) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள தச்சநல்லூா் மண்டலத்திற்கு, சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சுப்பிரமணிய நகா் மேல்புறம் வழியாகச் செல்லும் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு மற்றும் வால்வுகளை சரிசெய்யும் பணி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 27, 28) மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, தச்சநல்லூா் மண்டலத்தில் வாா்டு 8, 9,10 இளங்கோ நகா் ஆகிய பகுதிகளுக்கு மேற்கண்ட இரு தினங்களும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.