கரோனா பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விற்பனை செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பொதுமுடக்கம் காரணமாக விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை மாவட்டத்திற்குள்ளும், வெளிமாவட்டத்திற்கு செல்லவும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்திடவும், காய்-கனிகளை நுகா்வோருக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் குறைகளை நிவா்த்தி செய்யவும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. எனவே, காய்கனி, பழங்கள் தேவைப்படுவோா், 73056 11085 என்ற செல்லிடப்பேசி வழியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.