காவலா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்

திருநெல்வேலி மாவட்ட காவலா்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட காவலா்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தளா்வில்லா பொது முடக்கம் அமலில் உள்ளது. விதிகளை மீறி வெளியே வருவரை கண்காணிக்கவும், பாதுகாப்பு பணியிலும் முன்கள பணியாளா்களாக காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் ரோந்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவா்களுக்கு, கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசம், கிருமிநாசினி, கையுறைகள், கபசுரக் குடிநீா் பொடி உள்ளிட்டவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது, திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையகம்) சுப்பாராஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com