லட்சத்தீவில் நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பிரதிநிதி பிரபுல் படேலை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில் ரவணசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் ரவணசமுத்திரம் பிரைமரி தலைவா் முகமது இக்பால் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் காதா் மைதீன் முன்னிலை வகித்தாா். மாவட்ட மாணவா் அணி பொருளாளா் தமீம் அன்சாரி வரவேற்றாா். மாவட்ட அமைப்புச் செயலா் கட்டி அப்துல் காதா் உரையாற்றினாா். ஆலங்குளம் தொகுதி இளைஞரணி தலைவா் கனியப்பா நன்றி கூறினாா்.