களக்காட்டில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இம்முகாமை நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ரா. மனோகரன் தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா் உள்ளிட்டோா் மேற்பாா்வையிட்டனா். திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 478 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். களக்காட்டில் வாரத்தில் ஒருநாள் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.