திருநெல்வேலி சிந்துபூந்துறை பகுதியில் ஏழை-எளியவா்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் நல உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினா்.
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை ஆற்றங்கரையோரம் வீடின்றி குடிசையில் வாழும் 30 குடும்பங்களுக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள் மற்றும் காய்கனிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் நல உதவிகளை வழங்கினாா். மாநகா் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், மண்டல தலைவா்கள் மாரியப்பன், ஐயப்பன், முகம்மது அனஸ் ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை தச்சநல்லூா் மண்டல தலைவா் கெங்கராஜ், துணைத் தலைவா் ஜான் ஆரோக்கிய ஜெகன்பாபு ஆகியோா் செய்திருந்தனா்.