திருநெல்வேலியில் காவலா் குடும்பங்களுக்கான தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காவல் துறையை சோ்ந்த குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் (பொறுப்பு) பிரவீன் குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்- ஒழுங்கு) சீனிவாசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாவட்டத்தில் தடுப்பூசி போடாத காவல்துறையினா், காவல்துறையினரின் குடும்பங்கள், அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மருத்துவா் தமிழரசி தலைமையிலான குழுவினா் தடுப்பூசி செலுத்தினா்.
பயக28டஞகஐஇஉ: பாளையங்கோட்டையில் காவலா் குடும்பங்களுக்கு நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா்.