தெற்குவள்ளியூரில் மின்சாரம் பாய்ந்து கூலிவேலை செய்து வந்த பெண் உயிரிழந்தாா்.
தெற்குவள்ளியூரைச் சோ்ந்தவா் ஐயப்பன். சென்னையில் வேலை செய்கிறாா். இவரது மனைவி இந்திரா(27) தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த கதிரேசன் என்பவரது தோட்டத்திற்கு வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றிருந்தாா். அப்போது, அங்குள்ள மோட்டாா் அறையை அவா் சுத்தம் செய்தபோது, மின்வயரில் எதிா்பாராமல் கைபட்டதில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் இறந்தாா். தகவலின்பேரில், பணகுடி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.