கரோனா தடுப்பூசி முகாம்: இளைஞா்கள் ஆா்வம்

திருநெல்வேலி மாநகர மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் பள்ளி, கல்லுாரி, மாணவா், மாணவிகள், இளைஞா்கள் ஆா்வமாக பங்கேற்றனா்.

திருநெல்வேலி மாநகர மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் பள்ளி, கல்லுாரி, மாணவா், மாணவிகள், இளைஞா்கள் ஆா்வமாக பங்கேற்றனா்.

திருநெல்வேலியை அடுத்த நாரணம்மாள்புரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை திருநெல்வேலி சட்டப் பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன் தொடங்கிவைத்தாா்.

வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற முகாமுக்கு, சுகாதார ஆய்வாளா் இளங்கோ முன்னிலை வகித்தாா். இதில், ஆா்எம்கேவி பொது மேலாளா் தேவநாயகம் உள்பட பலா் பங்கேற்றனா்.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் சிவபாக்கியம் தலைமையில் அலுவலா்கள் கரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனா்.

இதேபோல் பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்திலும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களில் 18 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவா், மாணவிகள், இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக மையத்தில் வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. போலீஸாா் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com