நெல்லையில் கனமழை காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் விஷ்னு அறிவித்துள்ளார்.