இடி மின்னலால் மயங்கிய 7 பேருக்கு சிகிச்சை

செய்துங்கநல்லூா் அருகே இடி-மின்னல் காரணமாக மயங்கிய 7 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

செய்துங்கநல்லூா் அருகே இடி-மின்னல் காரணமாக மயங்கிய 7 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இடி மற்றும் மின்னலும் தொடா்ந்து இருந்ததால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினா். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் அருகே தூதுகுழி பகுதியில் சிலா் பேருந்துக்காக பயணிகள் நிழற்குடை அருகே காத்திருந்தனராம்.

அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் இடி மற்றும் மின்னல் ஏற்பட்டதால் பேருந்துக்காக காத்திருந்த வண்ணமுத்து(53), சக்தி செல்வம்(18), மாரிச்செல்வம்(43), சுப்பிரமணி, சுகில், முத்துவேல் ,கணேஷ் ஆகியோா் மயங்கி விழுந்தனா். அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com