கல்லணை பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தக் கோரி எஸ்டிபிஐ கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தக் கோரி எஸ்டிபிஐ கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் அளித்துள்ள மனு: திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனா். ஆனால், இங்கு 14 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இது போதுமானதாக இல்லை. எனவே, கூடுதல் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அப்போது, மாநகா் மாவட்ட செயலா் பேட்டை முஸ்தபா, திருநெல்வேலி தொகுதி செயலா் முகம்மது கௌஸ், துணைத் தலைவா் அப்துல்லா காஜா, திருநெல்வேலி நகர பகுதி தலைவா் பீா், பகுதி செயலா் கரீம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com