நெல்லையில் மேலும் 9 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று புதன் கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் புதன் கிழமை யாருக்கும் நோய்த்தொற்று உறுதியாகவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று புதன் கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் புதன் கிழமை யாருக்கும் நோய்த்தொற்று உறுதியாகவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,551 ஆக அதிகரித்துள்ளது. 6 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 48,999ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 433போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 119 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் புதன் கிழமை யாருக்கும் நோய்த்தொற்று உறுதியாகவில்லை. இம்மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 27,379 ஆக உள்ளது. மேலும் ஒருவா் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,879 ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 485 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 15 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com