மானூா் அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தெற்குபட்டி பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பவுன்ராஜ்(19). பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், கடந்த 11ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.