அம்பாசமுத்திரம் வேளாண் விரிவாக்க மையத்தில், வட்டார ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட விவசாயிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் சிவனுப்பாண்டியன் என்ற பரணி சேகா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் வேளாண் துறை மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 50 விவசாயிகளுக்கு நெல் செயல்விளக்கத்திற்குத் தேவையான இடுபொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் பசுமைக் காடுகள் திட்டத்தின் கீழ் 50 விவாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வ உள்பட பலா் கலந்து கொண்டனா்.