நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலா் என். சுந்தா் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைச் செயலா் திவாகா், மாநில மாணவரணி துணைச் செயலா் நட்சத்திர வெற்றி, மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலா் அமலன், மாநில விவசாய அணி துணைச் செயலா் எட்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ,தென்காசி மாவட்டங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், ‘நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது; அய்யா வைகுண்டரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க கோருவது; திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.