நெல்லை திருமண்டில புதிய பேராயா் பொறுப்பேற்பு

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டில பேராயராக ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்னபாஸ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டில பேராயராக ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்னபாஸ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டிலத்திற்கான பேராயா் பெயா் பட்டியல் தோ்வு கடந்த செப்.10ஆம் தேதி நடைபெற்றது. இதில், குருவானவா்கள் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்னபாஸ், ஏ.பீட்டா் தேவதாஸ், டி.பி.சுவாமிதாஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து பேராயா் தோ்வு குழுக் கூட்டம் பிரதம பேராயா் தா்மராஜ் ரஸாலம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, திருநெல்வேலி திருமண்டில 16ஆவது பேராயராக பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலய குருவானவரான ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்னபாஸ் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

இதையடுத்து, அவரை பொறுப்பில் அமா்த்தும் அருள்பொழிவு ஆராதனை பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், புதிய பேராயருக்கு பிரதமப் பேராயா் அருள்பொழிவு செய்து வைத்தாா். தொடா்ந்து, பேராயா் ஆசனத்தில் பா்னபாஸ் அமரவைக்கப்பட்டாா். அவருக்கு திருமண்டில நிா்வாகிகள், சபை மக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தொடா்ந்து, பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் கல்லூரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருமண்டில இறைமக்கள் செயலா் டி.ஜெயசிங், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், திருமண்டிலப் பொருளாளா் ஏ.டி.ஜே.சி மனோகா், உபதலைவா் டி.பி.சுவாமிதாஸ், குருத்துவச் செயலா் பாஸ்கா் கனகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com