திருநெல்வேலி நகரம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை( நவ. 23) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்புறம் செயற்பொறியாளா் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழையபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 23) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற உள்ளது.
இதனால் திருநெல்வேலி நகரம், பேட்டை, குன்னத்தூா், திருநெல்வேலி ரத வீதிகள், சி.என். கிராமம், வையாபுரி நகா், பாரதியாா் தெரு, அபிஷேகபட்டி, பழையபேட்டை , திருப்பணிகரிசல்குளம், ராம்நகா் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.