இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த பயிற்சி முகாம் கிருஷ்ணாபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் கிராமப்புற மாணவா், மாணவிகளுக்கு தன்னாா்வலா்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்ற விரும்பும் தன்னாா்வலா் களுக்கான பயிற்சி முகாம் கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி தொடங்கி வைத்தாா். உதவி திட்ட அலுவலா் சிவராஜ், வட்டார கல்வி அலுவலா் பாலமுருகன், கணபதி உள்பட பலா் முகாமில் பேசினா். அமுதா, ஜெபா்சன், விமலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.