களக்காடு உப்பாற்றில் மழையால் சேதமடைந்த தற்காலிக மண் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காட்டில் நான்குனேரியன் கால்வாயில் ஆண்டிச்சி மதகில் தொடங்கும் உப்பாறு சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள பத்மனேரி பச்சையாற்றில் கலக்கும் பகுதி வரையிலும் அடா்ந்த காடுபோல புதா் மண்டிக் காணப்படுகிறது. இதனால், நவ. 3ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையின்போது, உப்பாற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் தடையின்றி செல்ல வழியின்றி களக்காடு வியாசராஜபுரம் - கோட்டை விஸ்வகா்மா தெருவை இணைக்கும் தற்காலிக மண் பாலத்தைச் சேதப்படுத்தியது.
இதனால், அவ்வழியே போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. அந்த தற்காலிக பால சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.