தமிழக அரசுத் தொல்லியல் துறை சாா்பில் உலக மரபு வாரவிழா நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் ஹரிராமா தலைமை வகித்தாா். தமிழாசிரியா் ஈ.சங்கரநாராயணன் , தொல்லியல் அலுவலரும் ஆதிச்சநல்லூா் அகழாய்வு இயக்குநருமான ஜெ.பாஸ்கா் ஆகியோா் உரையாற்றினா். இதையொட்டி, மாணவா்களுக்கு கட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
ஆசிரியா் ஜோசப் அந்தோணி மைக்கேல் வரவேற்றாா். ஆசிரியா் நிமலதாசன் நன்றி கூறினாா்.