நெல்லையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (நவ.26) நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (நவ.26) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. அதன் படி வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, கல்விச்சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 10.30 மணிக்கு வேலைவாய்ப்பு நேரில் வர வேண்டும்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும்; வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெற  டெலகிராம் குழுவில் இணைந்து பயன்பெறலாம். மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com