களக்காட்டில் 2 நாள்கள் இடைவெளிக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
களக்காடு வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை முழுவதும் தொடா் மழை பெய்தது.
வெள்ளி, சனி, ஞாயிறு பகல் முழுவதும் மழையின்றி லேசான வெயில் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் 5.30 மணி முதல் லேசான மழை பெய்தது. பின்னா் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கால்வாய்களில் நீா்வரத்து அதிகரித்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.