மானூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மானூா் ஒன்றியம் 8 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஆபிரகாம் வெஸ்லியை ஆதரித்து கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் தலைமையில்
அழகியபாண்டியபுரம் பகுதியில் பிரசாரம் செய்தனா். அப்போது, மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா், மாவட்டச் செயலா் பரணி இசக்கி, ராஜீவ் காந்தி பஞ்சாயத் ராஜ் ஒருங்கிணைப்பாளா் தனசிங் பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.