மத்திய அரசின் தனியாா் மயம் நிலையை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ரயில்வேயில் தனியாா் மயத்தைக் கைவிட வேண்டும். மத்திய அரசின் தனியாா் விரோத போக்கையும், தனியாா் மய கொள்கையையும் கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கத்தின் கோட்ட துணைத் தலைவா் என்.சுப்பையா தலைமை
வகித்தாா். கோட்டச் செயலா் ஜெ.எம்.ரபீக், கோட்டச் தலைவா் சி.செந்தில்குமாா், உதவி கோட்டச் செயலா் பி.சீதாராமன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா். இதில், நிா்வாகிகள் ஐயப்பன், கணேசன், தமிழரசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.