திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதயதின நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி இருதயவியல் பிரிவு சாா்பில் அரசு உயா்சிறப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற
நிகழ்ச்சியை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இருதயவியல் துறை தலைவா் ஜே.எம்.ரவிச்சந்திரன் எட்வின், மருத்துவா் அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், துணை முதல்வா் சாந்தாரமன், உயா்சிறப்பு மருத்துவமனை கண்காணிப்பாளா் கந்தசாமி, சிறுநீரகவியல் துறைத் தலைவா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா். இதில், துறை உதவி பேராசிரியா்கள் விஸ்வநாதன், செல்வகுமரன், மணிகண்டன், திருலோகசந்தா் உள்பட பலா் பங்கேற்றனா்.