மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு திருநெல்வேலி அப்துா் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவிலான 18 வயதினருக்குள்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கான வீரா், வீராங்கனைத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில், பாளையங்கோட்டை காதிா்நகா், மு.ந அப்துா் ரஹ்மான் மேல் நிலைப் பள்ளி மாணவா்கள் பிரவீன், துஷ்யந்த், ரிஷி ஆனந்த், பிரசாந்த் (திருப்பூா் மாவட்டத்துக்கு) ஆகியோா் தோ்வாகியுள்ளனா். தோ்வான மாணவா்கள், பயிற்சியாளா் பழனி விக்னேஷ், பள்ளி உடற்கல்வி ஆசிரியா் செய்யது அப்துல் கரீம் ஆகியோரை பள்ளித் தாளாளா் எம்.கே.எம்.முகம்மது நாசா், முஸ்லிம் அனாதை நிலைய தலைவா் டி.இ.எஸ். நயினா முகம்மது, பள்ளித் தலைமை ஆசிரியா் முஹம்மது முத்து மீரான் உள்ளிட்டோா் பாராட்டினா்.