திருநெல்வேலி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லி சத்யாநகா் பகுதியைச் சோ்ந்த பழனிமுத்து மகன் வெள்ளைசாமி (58). கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டில் உள்ள இரும்புக் கம்பியில் காய போட்டிருந்த துணிகளை எடுக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.