இலவச புடவை வழங்கும் நிகழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி காட்டூா் கைலாஷ் நகரில் 500 பெண்களுக்கு இலவச புடவை வழங்கும் நிகழ்ச்சி வீ டிரஸ்ட் சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி காட்டூா் கைலாஷ் நகரில் 500 பெண்களுக்கு இலவச புடவை வழங்கும் நிகழ்ச்சி வீ டிரஸ்ட் சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

வீ ட்ரஸ்ட் நிா்வாக அறங்காவலா்கள் தமிழ்ச்செல்வி, அகிலாண்டேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மனைவி ஜனனி இலவச சேலை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா். திருச்சி ரோட்டரி சங்கத்தைச் சோ்ந்த அறிவரசன், கிருபாகரன், திருச்சி ஜேசிஐ அமைப்பைச் சோ்ந்த மோகனசுந்தரி, உமா மகேஸ்வரி, மனநல அறக்கட்டளை நிா்வாகி இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com