ராதாபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் பரிசளிப்பு விழா

ராதாபுரம் அருகே உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

ராதாபுரம் அருகே உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இக் கல்லூரியில் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவா், மாணவிகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டிகள் இணைய வழியாக நடைபெற்றன.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் அதிகமான மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் ஹெலன் லாரன்ஸ் தலைமை வகித்தாா். வடக்கன்குளம் வளனாா் குருக்கள் இல்ல அருள்தந்தை ஜெபநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா். கல்லூரி முதல்வா் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் பாராட்டி பேசினாா். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com