வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தல் புதன்கிழமை நடைபெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வாக்குப் பதிவு மையங்களில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தல் புதன்கிழமை நடைபெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வாக்குப் பதிவு மையங்களில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக பாளையங்கோட்டை, மானூா், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில், பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள ஓயாசிஸ் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி உள்ளிட்ட வாக்குப் பதிவு மையங்களை மாவட்ட ஆட்சியா் விஷ்ணுநேரில் சென்று ஆய்வு செய்தாா். அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டுறை அறையில் இருந்தபடி இணைய கேமராக்கள் மூலமாக பல்வேறு வாக்குப் பதிவு மையங்களை ஆட்சியா் விஷ்ணு கண்காணித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com