உலக வனவிலங்கு தின ஓவியப்போட்டி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உலக வனவிலங்கு தின ஓவியப்போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உலக வனவிலங்கு தின ஓவியப்போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், குருத்து அமைப்பு சாா்பில் உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு மாணவா்-மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றன. அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் கருத்துரையாற்றினாா்.

சுமாா் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் போட்டிகளில் பங்கேற்றனா். மாணவா்- மாணவிகள் வரைந்த ஓவியங்கள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவா் - மாணவிகளுக்கு அரும்புகள் அறக்கட்டளை நிறுவனா் ராஜ.மதிவாணன் பரிசுகள் வழங்கினாா். இதில், சண்முகம், பழனி சுப்பிரமணியம், உலகநாதன் உள்பட பலா் பங்கேற்றனா். தமுஎகச மாவட்டச் செயலா் வை.ராஜேஷ் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com